search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாநகராட்சி அலுவலகம்"

    • மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • தூய்மை பணியாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் இன்று 4-வது நாளாக நீடித்து வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சியில் தூய்மை பணிகளை ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை திரும்பப் பெறவேண்டும். இதற்காக இன்று நடைபெறவுள்ள டெண்டரை ரத்து செய்ய வேண்டும்.

    480 நாட்கள் பணியாற்றிய தினக்கூலி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியமான நாள் ஒன்றுக்கு ரூ. 725 ஐ ஏப்ரல் முதல் வழங்க வேண்டும். மாதந்தோறும் முதல் தேதி ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு., எல்.பி.எப்., உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் கடந்த 23-ந் தேதி முதல் தூய்மைப் பணியாளர்கள், குடிநீர் விநியோகப் பணியாளர்கள், ஓட்டுனர்கள் உள்ளிட்டோர் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மாநகராட்சி பகுதியில் குப்பைகள் தேங்கி நோய் வரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    ஒவ்வொரு நாளும் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தூய்மை பணியாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் இன்று 4-வது நாளாக நீடித்து வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் இன்று அனைத்து தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில், திருப்பூர் எம்.பி. சுப்பராயன் மற்றும் தோழமைச் சங்கங்களின் நிர்வாகிகள் முன்னிலை வகித்து கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.

    இதுகுறித்து, ஏஐடியுசி மாநிலச் செயலாளர் சின்னசாமி கூறுகையில், "தூய்மைப் பணியாளர்கள் 4-வது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    எங்களது தொடர் போராட்டத்தின் விளைவாக தொழிலாளர் நலத் துறை அலுவலகத்தில் இன்று மதியம் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. அதன் முடிவைப் பொறுத்து பணியாளர்களின் அடுத்த கட்டப் போராட்டம் முடிவு செய்யப்படும்" என்றார்.

    • வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • இஸ்லாமியர்களை அச்சுறுத்தும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.

     திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி 45-வது வார்டு கோம்பை தோட்டம் பகுதியில் திருப்பூர் மாநகராட்சி சார்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். நேற்று வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்தநிலையில் இன்று காலை கழிவுநீர் சுத்திகரிப்பு மைய எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பின் நிருபர்களிடம் கூறியதாவது :- இஸ்லாமியர்களை அச்சுறுத்தும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. தமிழக அரசு தங்களை பாதுகாக்கும் என்ற நம்பிக்கையில் இருந்து வரும் நிலையில், மேயர், எம்.எல்.ஏ., அமைச்சர் என 3 பேரும் தனித்தனியாக செயல்படுகின்றனர்.

    நாளை மாநகராட்சி மேயர்., எம்.எல்.ஏ, ஆட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை என்றால் இத்திட்டத்தால் பாதிக்கப்படும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பொதுமக்களை திரட்டி 23-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாநகராட்சி அலுவலகம் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும். மேலும் கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடைபெறும் என தெரிவித்தனர்.

    • மதுரையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் வருகிற 11-ந் தேதி நடக்கிறது.
    • மேற்கண்ட தகவலை மதுரை மாநகராட்சி மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    மதுரை

    மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு செவ்வாய்கிழமை தோறும் வார்டு மறுவரையறை செய்யப்பட்ட 5 மண்ட லங்களுக்கு அந்தந்த மண்டல அலுவலகங்களில் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது.

    அதன்படி ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள மதுரை மாநகராட்சியின் வடக்கு மண்டல அலுவலகத்தில் வருகிற 11-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் 12.30 வரை பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.

    மேயர் இந்திராணி, ஆணையாளர் சிம்ரன் ஜித்சிங் ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள். வடக்கு மண்டலத்திற்குட்பட்ட விளாங்குடி, கரிசல்குளம், ஜவகர்புரம், விசாலாட்சி நகர், அருள்தாஸ்புரம், தத்தனேரி மெயின்ரோடு, அய்யனார் கோவில், மீனாட்சிபுரம், பீ.பீ.குளம்.

    நரிமேடு, அகிம்சாபுரம், கோரிப்பாளையம், தல்லாகுளம், சின்ன சொக்கிகுளம், கே.கே.நகர், அண்ணா நகர், சாத்த மங்கலம், பாத்திமா நகர், பெத்தானியாபுரம், பி.பி.சாவடி, கோச்சடை ஆகிய வார்டுகளை சேர்ந்த பொது மக்கள் இந்த குறைதீர்க்கும் முகாமில் பங்கேற்று குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன்பெறலாம்.

    மேற்கண்ட தகவலை மதுரை மாநகராட்சி மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • வையாபுரி நகர் அம்மா உணவகம் அருகே கழிவு நீர் ஓடைகள் மோசமான நிலையில் உள்ளது என மனுவில் கூறப்பட்டுள்ளது.
    • தி.மு.க. வட்ட செயலாளர் சடாமுனி தலைமையில் பொதுமக்கள் திரண்டு வந்து மனு அளித்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் வாராந்திர குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மேயர் சரவணன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்.

    இதில் துணை மேயர் கே.ஆர்.ராஜூ, செயற் பொறியாளர் வாசுதேவன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    அப்போது 28-வது வார்டு கவுன்சிலர் சந்திர சேகர் பொதுமக்களுடன் வந்து ஒரு மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    28-வது வார்டுக்குட்பட்ட பாரதியார் தெருவில் உள்ள ரேஷன் கடையின் மேல் பகுதியில் காசிபிள்ளை நூலகம் செயல்பட்டு வருகிறது. இதன் மேற்கூரை பெயர்ந்து காணப்படு வதுடன், மாடிக்கு செல்லும் படிகள் மோசமாக உள்ளது.எனவே அதனை உடனடி யாக சீரமைக்க வேண்டும்.

    டவுன் வையாபுரி நகர் அம்மா உணவகம் அருகே 4 பகுதிகளிலும் உள்ள கழிவு நீர் ஓடைகள் மோசமான நிலையில் உள்ளது. பூதத்தார் சன்னதி தெருவில் உள்ள கழிவுநீர் ஓடைகள் பழு தடைந்து சாலைகளில் கழிவு நீர் செல்கிறது. இதனால் நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக அதனை சீரமைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தச்சை மண்டலம் 2-வது வார்டு தி.மு.க. வட்ட செயலாளர் சடாமுனி தலைமையில் சுந்தரா புரம் ஆர்.எஸ்.ஏ. நகர், வடக்கு கரையிருப்பு உள் ளிட்ட பகுதிகளை சேர்ந்த செல்லத் துரை, அந்தோணி, பண்டாரம் மற்றும் பொதுமக்கள் திரண்டு வந்து கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    எங்கள் ஊரில் இருந்து மதுரை மெயின் ரோட்டுக்கு செல்வதற்கு பாதை வசதி இல்லை. எனவே உடனடியாக அங்கு பாதை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். கொம்பாபிஸ் நிழற்குடை பாதி கட்டிய நிலையில் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. அதனை உடனடி யாக கட்டி முடிக்க வேண்டும். சிவகுமார் பஸ் நிறுத்தத்திற்கு செல்ல ரெயில்வே சுரங்கப்பாதை வழியாக செல்ல வேண்டிய உள்ளது. ஆனால் அங்கு முட்புதர்கள் சூழ்ந்து காணப் படுகிறது. இதனால் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ள னர். இதனால் உடனடியாக அதனை அகற்றி தூய்மை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • அரசுநூற்றாண்டு விழா சிறப்பு நிதியாக 48.87 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது.
    • பூங்கா உள்ளிட்ட பணி மேற்கொள்ளப்படும்.

    உடுமலை :

    உடுமலை நகராட்சி 1918 ஜனவரி 1ல், மூன்றாம் நிலை நகராட்சியாக தோற்றுவிக்கப்பட்டு 1970ல் இரண்டாம் நிலை நகராட்சியாகவும், 1979ம் ஆண்டு முதல் நிலை நகராட்சியாகவும், 1984ம் ஆண்டு முதல் தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு,100ஆண்டுகளை கடத்துள்ளது.

    நகராட்சியாக 104 ஆண்டுகளான நிலையில், நூற்றாண்டு நினைவாக உட்கட்டமைப்பு மற்றும் பல்வேறு அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில் கடந்தாண்டு, அரசுநூற்றாண்டு விழா சிறப்பு நிதியாக 48.87 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது.இந்நிதியின் கீழ் ரூ. 3.75 கோடி செலவில், பஸ் நிலையம் விரிவாக்கம், 12.97 கோடி ரூபாய் செலவில் தங்கம்மாள் ஓடை பகுதியில் நடை பாதை மற்றும் தடுப்புச்சுவர், ரூ.15.98 கோடி செலவில் கழுத்தறுத்தான் பள்ளம் பகுதியில்மழை நீர் வடிகால், சந்தை வளாகம், பூங்கா புதுப்பிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தின் கீழ் நகராட்சி புதிய அலுவலகத்தில், உட் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தவும், நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் நூற்றாண்டு நினைவுத்தூண் அமைக்க ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.அதன் அடிப்படையில் தற்போது நகராட்சி அலுவலகம் முன் அழகாக வடிவமைக்கப்பட்ட நினைவு தூண் நிறுவப்பட்டுள்ளது. தொடர்ந்து சுற்றிலும் பூங்கா உள்ளிட்ட பணி மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×